சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 


 தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். 12 ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!