கொரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

MUST READ

அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் 20-ந் தேதிவரை அரசு அலுவலகங்களுக்கு அவர்கள் வருவதில் இருந்து முழுவதும் விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!