ஆன்லைன் வகுப்புகளை விரைவில் துவக்க உத்தரவு 

╰•★★ Join Our WhatsApp ★★•╯ 

புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை துவக்கி நடத்தும்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலால் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தாலும், புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. பாட புத்தக வினியோகம், மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் துவங்கி உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கான, இலவச பாட புத்தகம் வழங்கும் பணியை, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கல்வி, டிவியின் புதிய கல்வி ஆண்டு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும், அவர் துவக்கி வைக்க உள்ளார்.இதைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும், புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆன்லைன் வழியில், விரைவில் துவக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!