அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அகவிலைப்படி வழங்குவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ள நிலையில், அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவில், 2021-ஆம் ஆண்டு ஜூலை வரையில் அகவிலைப்படி உயா்வு வழங்குவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 இப்போது அறிவிப்பு: 

கரோனா நோய்த் தொற்று காரணமாக, மத்திய அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்டது. 

மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம், தமிழக அரசும் அகவிலைப்படி உயா்வினை அறிவிப்பது வழக்கம். மேலும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், அகவிலைப்படி உயா்வு வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் காலமான ஜூலை மாதம் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!