வேலூரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
தமிழகத்தில் இதுவரை 7 லட்சம் பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 
இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதம் முதல் பொருட்களை வாங்கி கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்படும். 
மேலும் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலி குளிர்பான ஆலைகள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

أحدث أقدم

Search here!