அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்கு நர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 'தூய்மையான நிகழ்வுகள்-2021' என்ற திட்டத் தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது.

 இதற்கான வழிகாட்டுதல்கள், கால அட்டவணை தற் போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.1-ஆம் தேதி தூய்மை உறுதிமொழிதினம், செப்.2-இல் தூய்மை விழிப்புணர்வு தினம், செப்.3-இல் சமூக விழிப்புணர்வு தினம், செப்.4, 5-இல் பசுமைப் பள்ளி இயக்க நாள்கள், செப்.6, 7-இல் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல், செப்.8-இல் கை கழுவுதல் தினம், செப்.9,10-இல் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப்.11,12-இல் தூய்மை நிகழ்வு கண்காட் சிகள், செப்.15-ஆம் தேதி பரிசுகள் வழங்குதல் என்ற கால அட்டவணை யின்படி செயல்பட வேண்டும். இந்த விவகாரம் சார்ந்து உரிய அறிவுறுத் தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும்

Post a Comment

أحدث أقدم

Search here!