ஆங்கில வழிப் பிரிவு- அனுமதி வழங்குதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள் 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06 நக.எண்.31083/8-81/2021, நாள்: 2308.2021 

பொருள்: 

பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - ஆங்கில வழிப்பிரிவு- சுயநிதி/நிதியுதவி/பகுதி நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக, 

பார்வை! 

1. அரசானை எண்.60பள்ளிக் கல்வித்துறை நாள் 21.06.1993. 

2 அரசானை எண்.101 பள்ளிக் கல்வித்(Budget-1) துறை நாள் 18.05.2018 

3. அரசாணை எண்.148, பள்ளிக் கல்வித் துறை நாள்.20.07.2018 

4.பள்ளிக் கல்வி ஆணையரின்குறிப்பாணை நாள்.09.07.2021 

ஆணை 

பார்வையில் காணும் அரசாணைகள் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தனிகவனம் ஈர்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் சுயநிதி/நிதியுதவி/பகுதி நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள், சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால், சார்ந்த பள்ளியை பார்வையிட்டு, அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு, அவை பார்வை- 1 மற்றும் 3ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது. பார்வை-2 ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி | நிதியுதவி / பகுதி நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி இக்கருத்துருக்களை பார்வை-1 & 3-ல் காணும் அரசாணைகளில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து ஆங்கில வழிப்பிரிவு துவக்க அனுமதியினை தங்கள் நிலையில் வழங்கிக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

                                                                                            பள்ளி ஆணையருக்காக


Post a Comment

أحدث أقدم

Search here!