சிறந்த நுால்களுக்கு அரசின் பரிசு பெறலாம் 



சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற, இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் சிறந்த நுால்களுக்கான பரிசு கள் வழங்கப்படுகின்றன. இதற்கு, கவிதை, புதி னம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திற னாய்வு, நுண்கலைகள், அகராதி உள்ளிட்ட 33 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள நுால்களை அனுப்பலாம். போட்டிக்கு, ஒவ்வொரு நுாலிலும் 10 பிரதி களை, நுாலாசிரியர், பதிப்பகத்தார் ஒப்புதலுடன், 100 ரூபாய் பதிவுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

 போட்டிக்கு அனுப்பப்படும் நுால் களின் கருத்துக்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் வெளிவந்திருக்க கூடாது. போட்டியில் உள்நாடு, வெளிநாடு வாழ் எழுத் தாளர்கள் பங்கேற்கலாம். உள்ளூர் எழுத்தாளர்க ளுக்கு, 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப் படும். போட்டிக்கான நுால்களை, வரும் 31ம் தேதிக்குள், 'இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர் - 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Post a Comment

أحدث أقدم

Search here!