தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-600006. ந.க.எண். 29000/ஐ/இ1/ 2020, நாள்.04.08.2021. 

பொருள்: 

பள்ளிக் கல்வி மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2021-2022ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது 05.09.2021 அன்று வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோருதல்-சார்ந்து.

 பார்வை: 

அரசாணை (1டி) எண். 122, பள்ளிக் கல்வித் (பொது||)த் துறை, நாள்.03.08.2021. 

முன்னாள் "குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன்" அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு, அவ்விழாவில் தொடக்க/நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான "டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு வருகின்றது. 

2. 2021ஆம் ஆண்டிற்கான டாக்டர். இராதாகிருஷ்ணன்விருது வழங்கும் விழா 05.09.2021 அன்று ஆசிரியர் தினவிழாவாக நடைபெற உள்ளது. எனவே, பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளவாறு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நேர்வில், மாவட்ட அளவில் குழு அமைத்து வருங்காலங்களில் எவ்வித புகார்களுக்கும், இடமளிக்காவண்ணம் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆசிரியர்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்களின் விவரங்களையும் மற்றும் கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து 20.08.2021-க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களது பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




Post a Comment

أحدث أقدم

Search here!