'அங்கன்வாடி குழுந்தைகளுக்கு, இரண்டு ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, துாத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்,'' என, சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புகள்: 

 * முதியோர் கண்ணியமாக வாழ, மாநில மூத்த குடிமக்கள் கொள்கை; பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் 

 * விதவையர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் 

 * புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூக அலுவலகங்கள், குழந்தை பாதுகாப்பு பிரிவு, இளைஞர் நீதிக் குழுமம், குழந்தை நலக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்

 * முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர், 35 வயதுக்குள், குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும் என்ற, வயது வரம்பு, 40 ஆக உயர்த்தப்படும் 

 * சத்துணவு திட்டத்தின் கீழ், 69.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,291 சத்துணவு கூடங்களுக்கு சமையல் அறை கட்டப்படும். 1,000 சத்துணவு மையங்களில் 80 லட்சம் ரூபாய் செலவில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும் 

 * ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில், தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் 7,228 அங்கன்வாடி மையங்களுக்கு, வாடகை உயர்த்தி வழங்கப்படும் 

 * அங்கன்வாடி குழந்தைகளுக்கு, இரண்டு ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், கோவை, கன்னியாகுமரி, கரூர். நீலகிரி, சிவகங்கை, துாத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுப்படுத்தப்படும் 

 * சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில், சிறுவர்களுக்கான போதை தடுப்பு மையங்கள் 76 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் 

 * சமூக பாதுகாப்பு துறையில், மதுரை மண்டல அலுவலகம் மீண்டும் தோற்றுவிக்கப்படும் 

 * சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெறும் 41.1 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளிகள் திறந்த பின், ஊட்டசத்து குறைபாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நிவர்த்தி செய்யப்படும்.

Post a Comment

أحدث أقدم

Search here!