3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான அடைவு ஆய்வு (NAS 2021) ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் -
சேலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)
அவர்களின் செயல்முறைகள்
முன்னிலை:
முனைவர் இரா.முருகன், எம்.எஸ்சி, பி.எட், எம்.பில்., பிஎச்டி
நக.எண் 1182 QMT ஓபக/2021
நாள்: 102021
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சேலம் மாவட்டம் கல்வித் தர
மேம்பாடு (QMT) 2021-22 - 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கான தேசிய அளவிலான அடைவு ஆய்வு (NAS
2021) ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்ந்த வழிகாட்டுதல்கள்
வழங்குதல் சார்பு.
பார்வை:
National Achievement Survey 2021 Technical Note on Assessment
Framework
மேற்காண் பார்வையின்படி தேசிய அளவிலான அடைவு ஆய்வு மனிதவள
மேம்பாட்டுத் துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் 12112021 அன்று 3, 5, 8
மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாய்விற்கு சேலம்
மாவட்டத்தில் உள்ள அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 200 பள்ளிகள் தெரிவு
செய்து மொழி பாடம், கணிதம், சூழ்நிலை அறிவியல் | அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
பாடங்களிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசிய அளவிலான அடைவு ஆய்வின் நோக்கம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும்
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி
ஏற்பட்டுள்ளதால் அக்குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தேவையான
நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பேரிடர் காலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு குறிப்பாக 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு
பயிலும் மாணாக்கர்களின் கற்றல் அடைவு மற்றும் கற்றல் விளைவுகள்
பின்தங்கியுள்ள விவரம் சார்ந்தும் இவ்வாய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளது.
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் அடிப்படை மொழித் திறன்
(Fundamental Literacy) மற்றும் அடிப்படை கணித திறன்கள் (Numeracy) சார்ந்தும்
ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆகவே இவ்வாய்விற்கு 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களை தயார்
செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் தவறாது பின்பற்றி
தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
.
إرسال تعليق