செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பிற்கான இணையவழி விண்ணப்பம், நேற்று துவங்கியது.

 செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில் 2021 - 22ம் கல்வி ஆண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இளங்கலை - பி.எஸ்சி., நர்சிங், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.பார்ம்., உள்ளிட்ட பல பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நேற்று துவங்கியது. நவ., 8ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


கல்லுாரி முதல்வர் முத்துகுமரன், விண்ணப்பத்தை துவக்கிவைத்தார். கல்லுாரி வளாகத்தில், இணையவழியில் மாணவர்கள் விண்ணப்பிக்க உதவியாக ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய வலைதளங்களில் விண்ணப்பிக்கலாம்.இத்தகவலை, மருத்துவமனை முதல்வர் முத்துகுமரன் தெரிவித்தார்.

Post a Comment

أحدث أقدم

Search here!