தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,16) உருவாகக் கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 12 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. 

இன்று (நவ.,15) மற்றும் நாளை ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,17, 18ம் தேதிகளில் சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!