அனுப்புநர் 

சா. சேதுராமவர்மா, 
அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 600 006. 

பெறுநர் 

செய்தி ஆசிரியர், 
அனைத்து ஊடகங்கள் 

ந.க.எண். 011220/9/2021 நாள் : 09.11.2021 

ஐயா / அம்மையீர், பொருள் : தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 - கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைத்தல் குறித்தான செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் தொடர்பாக. நவம்பர் -2021, தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதால், 10.11.2021 முதல் 12.11.2021 நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கான புதிய தேர்வுக்கால அட்டவணை தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும். வரை இச்செய்திக்குறிப்பினை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல. 

தங்கள் நம்பிக்கையுள்ள, ஒம்/- இயக்குநர்

Post a Comment

أحدث أقدم

Search here!