பழங்குடியினர் நல இயக்குநரகம் சென்னை 600005. அழைப்பாணை ஐயா / அம்மையீர், பொருள் 

பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்புதல் - கலந்தாய்வு நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக. 

பார்வை 

1 பழங்குடியினர் நல இயக்குநரின் அவர்களின் செயல்முறைகள் எண்.பமே/11/9464/2021, நாள்.09.11.2021. 

2 பழங்குடியினர் நல இயக்குநரக கடித நாள்.17.11.2021 

பார்வை 2- இல் கண்டுள்ள கடிதத்தில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட கலந்தாய்வு 21.11.2021 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது நிர்வாக காரணங்களுக்காக கலங்தாய்வு நாள் மாற்றம் செய்யப்பட்டு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாளில் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

கலந்தாய்வு நாள் 24.11.2021 
நேரம் 10.00 மு.
இடம் பழங்குடியினர் நல இயக்குநரகம், சென்னை 5

மேலும் கலந்தாய்வு நாளன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாணையினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகையில் வைத்தும், அனைவருக்கும் சுற்றுக்கு அனுப்பி கையெழுத்து பெறுமாறும் தொடர்புடைய கட்டுப்பாட்டு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஓம்./- V.C. ராகுல் பழங்குடியினர் நல இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநருக்காக org காலம் 2021 நp 

பெறுநர் 

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக) நகல் 

1) திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, தருமபுரி, நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம். 

2) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்.

 3) கோப்பு நகல்.


Post a Comment

أحدث أقدم

Search here!