எல்லைப் பாதுகாப்புப் படையில்(பி.எஸ்.எப்) கான்ஸ்டபிள் பணி அந்தஸ்தில் காலி இடங்களை நிரப்புவதற்கு அழைப்பு வெளியாகி உள்ளது. 

சமையலர், துப்புரவு பணியாளர், தையல்காரர், தச்சர், பெயிண்டர், எலெக்ட்ரீசியன் உள்பட மொத்தம் 2788 பணி இடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. 1-8-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட பணி சார்ந்த அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2022. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை rectt.bsf.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!