நாலாயிரம் திவ்ய பிரபந்தம் திட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு SOURCE NEWS

திருமலை, ஜன.20: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்ப வர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்ப நாடு முழுவ தும் உள்ள ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்களிடமிருந்து விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான பகுப்பு-1, 2 தேர்வா ளர்களாக பணியாற்றத் தகுதியுடையவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ கோயில்களில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்ய வேண்டும். 

இதற்காக 'www.tirumala.org' என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சிறப்பு அலுவலர் அலுவலகம், நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் திட்டம், ஆழ்வார் திவ்ய பிரபந்தம் திட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், சுவேதா பவன், திருப்பதி-517502 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இதர விவரங்களை அலுவலக நேரத்தில் 0877-2264519 என்ற எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!