ஆன்லைன் மூலம் ‘அரியர்’ தேர்வு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தநிலையில் எந்தந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், நேரடி தேர்வு நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி பாலிடெக்னிக் 1, 3, 5-வது செமஸ்டர்களுக்கும், என்ஜினீயரிங் 3, 5, 7 மற்றும் பட்டப்படிப்பு இளநிலை 1, 3, 5-வது செமஸ்டர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது. 

மேலும் முதுகலை பட்டப்படிப்புகளில் 1, 3-வது செமஸ்டர்களுக்கும் ஆன்லைனிலேயே நடத்தப்பட உள்ளது. ஆப்லைன் (நேரடி தேர்வு) தேர்வை பொறுத்தவரையில், இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். அதாவது இளநிலை 6-வது செமஸ்டர் மற்றும் முதுநிலையில் 4-வது செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு, நேரடி தேர்வாக நடைபெறும். 

 அதேபோல் எம்.ஏ., எம்.எஸ்.சி. முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு 1, 3-வது செமஸ்டர்கள் ஆன்லைனில் நடக்கும். எம்.இ. 3-வது செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும். அரியர் தேர்வுகளை பொறுத்தவரையிலும் ஆன்லைனிலேயே நடத்தப்பட இருக்கிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!