தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க. எண். 34462/பிடி1/81/ 2022, நாள்.20.01.2022 

பொருள் : 

பள்ளிக் கல்வி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருதல் - 22.01.2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்குதல் - சார்ந்து, 

பார்வை: 

1, அரசு செய்தி வெளியீடு எண்.1468, நாள்.31.12.2021. 
2. அரசு செய்தி வெளியீடு எண்.026, நாள்.05.01.2022. 
3. அரசு செய்தி வெளியீடு எண்.112, நாள்.16.01.2022, 

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. A 

பள்ளிக் கல்வி ஆணையருக்காக 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

Post a Comment

أحدث أقدم

Search here!