மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006. ந.க.எண்:2411/12/2021 நாள் 16.05.2022 

பொருள்: 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள். ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல்- சார்பு. 


பார்வை: பள்ளிக் கல்வித் (ERT) துறை அரசாணை எண் 147= நாdr , 22.10.2021 கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கம் தமிழக அரசால் பார்வையில் காணும் அரசாணையின்படி அறிவிக்கப்பட்டது. இவ்வியக்கம் 2025 ஆம் கல்வியாண்டிற்குள் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கினை கொண்டுள்ளது. மேலும், இவ்வியக்கம் 2022-2023 ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இவ்வியக்கத்தினை செயல்முறைப்படுத்தும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மற்றும் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான நிலைவாரியான பாடப்புத்தகம் வடிவமைத்தல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுபெற்றுள்ளது. மேலும் இவ்வியக்கம் சார்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மாநில அளாவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை உண்டு உறைவிட பயிற்சியாக மதுரை மாவட்டம், பில்லரி ஹாலில் 23.05.2022 முதல் 28.05.2022 வரை 6 நாள்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இணைப்பு1-ல் மாவட்ட வாரியாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் சார்ந்து முதன்மை கருத்தாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கைக்கு ஏற்ற பெயர்ப்பட்டியல் இல்லாத மாவட்டங்களில் தகுந்தவாமைய ஆர்வமிக்க மற்றும் கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் DIET கல்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக பணி விடுவிப்பு செய்யுமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 01.06.2022 மற்றும் 02.06.2022 நடத்திடுமாறும், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இக்கருத்தாளர் பயிற்சிக்கான செலவினத்தை அந்தந்த நிறுவன Programme and Activities நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி ற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.





Post a Comment

أحدث أقدم

Search here!