அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 1,661 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், காலை, மதியம் என, இரண்டு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளில், கவுரவ விரிவுரையாளர்கள் என்ற, தற்காலிக பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கு, 1,661 கவுரவ விரிவுரையாளர்களை புதிதாக நியமிக்க, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனங்களை, கல்லுாரி முதல்வர்கள் மேற்கொள்ள, அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!