3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான அறிவிப்பு இன்று வெளியீடு 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின், பொதுத்தேர்வு 2022-க்கான 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை 30-ந் தேதி (இன்று) வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. 


விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜூலை 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வானது காவலர் பொதுத்தேர்வு 2022-ல் நடத்தப்பட இருக்கிறது. இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தெளிவுகளுக்காக வாரியத்தின் கட்டுப்பாட்டு அறை, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. 


இவற்றை ஜூலை 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை அலுவலக பணி நேரத்தில் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான கூடுதல் விவரங்களை வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையை 044-40016200, 28413658 மற்றும் 9499008445, 9176243899 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!