பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி தெரிவித்தார். 

 2 லட்சம் மாணவர்கள் 

திருச்சியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் நடப்பாண்டு அரசுப் பள்ளியில் இதுவரை சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது. பள்ளி கட்டிடங்கள் பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சொல்லி இருக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!