பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்க லைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் நேரடி2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு 80ஆயிரத்துக்கும்மேற்பட்ட இடங் கள் உள்ளன. நிகழ் கல்வியாண்டில் (2022-23) இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி கடந்த சனிக்கிழ மையுடன் (ஜூலை 23) நிறைவு பெற் றது. இதற்கிடையே பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ, தாமதமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தான் வெளியிட்டது.


Post a Comment

أحدث أقدم

Search here!