13.11.2019 அன்று பதவி உயர்வு / பணி மாறுதல் பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 79 பேருக்கு பணிவரன்முறை செய்தல் சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பொருள்: 

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி-01.01.2019 நிலவரப்படி அரசு/ நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலின்படி பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டமை பணிவரன்முறை செய்தல்-பணியில் சேர்ந்தவர்களின் விவரங்கள் கோரியமை-சார்பு. 

பார்வை: 

1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,ந.க.எண்.6462/சி1/இ1/2019, நாள்: 13.11.2019. 

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.75195/சி1/இ2/2019, நாள்: 24.11.2020, 17.12.2020 மற்றும் 08.01.2021. 01.01.2019 நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி 13.11.2019 அன்று இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பதவி உயர்வு / பணி மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

أحدث أقدم

Search here!