பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப் பாடம் 1 , தமிழ்ச்சொல் வளம் - இயங்கலைத்தேர்வு / 10 TAMIL - EYAL 1 - ONLINE TEST - QUESTION & ANSWER

வினாக்களும் விடைகளும்

1) ' மொழி ஞாயிறு' என்று    அழைக்கப்படுபவர் ------

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) மறைமலை அடிகள்

இ) ம.பொ.சிவஞானம்

ஈ) மு.வரதராசனார்

விடை : அ ) தேவநேயப்பாவாணர் 

2) ' தமிழ்ச்சொல் வளம் ' என்னும் கட்டுரை உள்ள நூலின் பெயர்

அ ) சங்ககால ஆய்வுக்கட்டுரைகள்

ஆ) மொழி ஆய்வுக்கட்டுரைகள்

இ) சொல்லாய்வுக் கட்டுரைகள்

ஈ) தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்

விடை : இ ) சொல்லாய்வுக் கட்டுரைகள்

3) உலகத்திலேயே ஒருமொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு ------

அ) சிங்கப்பூர்

ஆ) மலேசியா

இ) இலங்கை

ஈ) இந்தியா

விடை : ஆ ) மலேசியா

4) "திருவள்ளுவர் தவச்சாலையை "அமைத்தவர் -----

அ) முத்துக்குமரனார்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) இளங்குமரனார்

ஈ) இலக்குவனார்

விடை : இ ) இளங்குமரனார்

5) ' நாடும் மொழியும் நமதிரு கண்கள் ' என்று பாடியவர்

அ) பாரதியார்

ஆ) ஔவையார்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

விடை : அ ) பாரதியார்

6) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். - இத்தொடரில் வண்ணமிட்ட பகுதி
குறிப்பிடுவது -----

அ) இலையும் சருகும்

ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்

ஈ) சருகும் சண்டும்

விடை : ஈ ) சருகும் சண்டும்

7) வேர்க்கடலை , மிளகாய்விதை
மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை -----

அ) குலைவகை

ஆ) மணிவகை

இ) கொழுந்து வகை

ஈ) இலை வகை

விடை : ஆ ) மணிவகை 

8) " திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் "  என்னும் நூலை எழுதியவர்

அ) ஜி.யு.போப்

ஆ)வீரமாமுனிவர்

இ) கால்டுவெல்

ஈ) உ.வே.சா.

விடை : இ ) கால்டுவெல்

9) நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதி எவ்வாறு அழைக்கப் படுகிறது?

அ) தாள்

ஆ) தண்டு

இ )  கோல்

ஈ) தூறு

விடை : அ ) தாள்

10) மூங்கிலின் அடிப்பகுதி ------  என அழைக்கப்படுகிறது.

அ) தட்டு

ஆ) கழி

இ) கழை

ஈ) அடி

விடை : இ ) கழை 

11 ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை ------

அ) சினை

ஆ) கவை

இ) கொப்பு

ஈ) போத்து

விடை : ஆ ) கவை

12) தென்னை, பனை முதலியவற்றின் இலை ------

அ) தோகை

ஆ) தோகை

இ) சருகு

ஈ) ஓலை

விடை : ஈ ) ஓலை

13) கொழுந்தாடை என எதன் நுனிப்பகுதி
அழைக்கப்படுகிறது ?

அ) சோளம்

ஆ) தென்னை

இ )  பனை

ஈ) கரும்பு

விடை : ஈ ) கரும்பு 

14) மாம்பிஞ்சைக் குறிக்கும் சொல் -----

அ) வடு

ஆ) கவ்வை

இ) குரும்பை

ஈ) கச்சல்

விடை : அ ) வடு 

15) இளங்குமரனார் யாரைப்போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார் ?

அ) பாவாணார்

ஆ) திரு.வி.க.

ஆ) வ.உ.சி.

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை : ஆ ) திரு.வி.க .

16) இளங்குமரனார் ------ 
தவச்சாலையை அமைத்தார்.

அ) இளங்கோவடிகள்

ஆ) ஓவையார்

இ) திருவள்ளுவர்

ஈ) பாரதியார்

விடை : இ ) திருவள்ளுவர்

17) தேரை அமர்ந்ததினால் கெட்ட
தேங்காய் ------

அ) அல்லிக்காய்

ஆ) ஒல்லிக்காய்

இ) தேரைக்காய்

ஈ) கூகைக்காய்

விடை : அ) அல்லிக்காய்

18) பைங்கூழ் என்று எதன் பசும்பயிர் அழைக்கப்படுகிறது?

அ) நெல்

ஆ) பனை

இ) தென்னை

ஈ) மா

விடை : அ ) நெல்

19) சம்பா நெல்லில் உள்ள உள்வகைகள்

அ ) இருபது

ஆ) நாற்பது

இ) அறுபது

ஈ) எண்பது

விடை : இ ) அறுபது

20 ) திருந்திய மக்களை மற்ற
உயிரினங்களிலிருந்து பிரித்துக்
காட்டுவது -----

அ) மொழி

ஆ) நாடு

இ) மதம்

ஈ) பழக்க வழக்கம்

விடை : அ ) மொழி 

Post a Comment

أحدث أقدم

Search here!