பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப் பாடம் - இயல் 1 - அன்னை மொழியே வினா & விடை / 10TH TAMIL - EYAL 1 - ANNAI MOZHIYE - ONLINE TEST

1) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

அ) துரை மாணிக்கம்

ஆ) இராச மாணிக்கம்

இ) சுப மாணிக்கம்

ஈ) வேதமாணிக்கம்

விடை : அ ) துரை மாணிக்கம்

2) பெருஞ்சித்திரனார் இவ்வாறு   சிறப்பிக்கப் படுகிறார்

அ) மகாகவி பெருச்சித்திரனார்

ஆ) கவிஞர் பெருஞ்சித்திரனார்

இ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 ஈ) புரட்சிக்கவி பெருஞ்சித்திரனார்

விடை : இ ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

3) ' அன்னை மொழியே ' என ஆசிரியர் உரைப்பது ------ தொடர்

அ) விளித்தொடர்

ஆ) வேற்றுமைத்தொடர்

இ) உரிச்சொல் தொடர்

ஈ) பண்புத்தொகை

விடை : அ ) விளித்தொடர்

4) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் வருவது

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் + நா

இ ) எம் + தமிழ் + நா

ஈ) எந்தம் + தமிழ் + நா

விடை : இ ) எம் + தமிழ் + நா

5)' தென்னன் மகளே' - இதில்
தென்னன் என்ற சொல் யாரைக்
குறிக்கும்?

அ ) சேரன்

ஆ) சோழன்

இ) பாண்டியன்

ஈ) பல்லவன்

விடை : இ ) பாண்டியன்

6) பெருஞ்சித்திரனார்  ------  மற்றும் தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்.

அ) செம்மொழி

ஆ) நம்மொழி

இ) வண்மொழி

ஈ) தென்மொழி

விடை : ஈ ) தென்மொழி 

7) பெருஞ்சித்திரனாரின் ------ 
மெய்ப்பொருளுரை தமிழுக்குக்
கருவூலமாக அமைந்துள்ளது.

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) நாலடியார்

ஈ) அகநானூறு

விடை : ஆ ) திருக்குறள்

8)' அன்னை மொழியே' எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் ------

அ) பாவியக்கொத்து

ஆ) கனிச்சாறு

இ) எண்சுவை எண்பது

ஈ) பள்ளிப்பறவைகள்

விடை : ஆ ) கனிச்சாறு

9) கீழ்வருவனவற்றுள்
பெருஞ்சித்திரனார் எழுதாத நூல்

அ) பாவியக்கொத்து

ஆ) உலகியல் நூறு

இ) பாஞ்சாலி சபதம்

ஈ) மகபுகுவஞ்சி

விடை : இ ) பாஞ்சாலி சபதம்

10 ) ' சாகும்போதும் தமிழ்படித்துச்
சாக வேண்டும் ' என்று பாடிய
கவிஞர்

அ) முத்தானந்தன்

ஆ) முத்துலிங்கம்

இ) சச்சிதானந்தன்

ஈ) சுரதா

விடை : இ ) சச்சிதானந்தன்

11) செந்தமிழ் - இலக்கணக் குறிப்புத் தருக.

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை

விடை : அ ) பண்புத்தொகை 

12) தும்பி ' என்பதன் பொருள் -----

அ) தம்பி

ஆ) வண்டு

இ) நண்டு

 ஈ) சிட்டு

விடை : ஆ ) வண்டு 

13) ' சிலம்பு ' -  என்ற சொல்லின் பொருள்

அ) சிதறுவது

ஆ) சிலப்பதிகாரம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) ஒருவகைக் கம்பு

விடை : ஆ ) சிலப்பதிகாரம்

14) வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக்
கொண்டவள்

அ ) பூமித்தாய்

ஆ) தமிழன்னை

இ) நதி

ஈ) மலையன்னை

விடை : ஆ) தமிழன்னை 

15) ' இன்னறும் பாப்பத்து' - இதில் பாப்பத்து என்ற சொல் குறிப்பது

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேற்கணக்கு

விடை : அ ) பத்துப்பாட்டு 

16) தென்னன் மகள் -----

அ) மீனாட்சி

ஆ) தமிழன்னை

இ) மங்கையர்க்கரசி

ஈ) பார்வதி

விடை : ஆ ) தமிழன்னை 

17) ' எண்தொகையே' - இதில்
குறிப்பிடப்படும் நூல்களின்   எண்ணிக்கை

அ) இரண்டு

ஆ) நான்கு

இ ) ஆறு

ஈ) எட்டு

விடை : ஈ )  எட்டு

18) செந்தாமரை - இலக்கணக்
குறிப்புத்தருக

அ) உவமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை : இ ) பண்புத்தொகை

19 ) மண்ணுலகம் - இலக்கணக்
குறிப்புத் தருக.

அ) பெயரெச்சம்

ஆ) வினையெச்சம்

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈ) உருவகம்

விடை : ஈ ) உருவகம்

20) முன்னைக்கும் முன்னை - பொருள் தருக.

அ) புதுமைக்குப் புதுமை

ஆ) பழமைக்குப் பழமை

ஈ) அன்னைக்கு அன்னை

ஈ) பழங்காலம்

விடை : ஆ) பழமைக்குப் பழமை

Post a Comment

أحدث أقدم

Search here!