பனிமலைப் பயணம்

வாங்க பேசலாம்
பக்கம் - 26

PREPARED BY THULIRKALVI TEAM 


 சிந்திக்கலாமா? 

 பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

விடை :  நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன். 

காரணம் : சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும். 

  சிந்திப்போம்! எழுதுவோம்!
பக்கம் - 27

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது? 

அ) மெதுவாக ஆ) எளிதாக இ) கடினமாக ஈ) வேகமாக 

விடை :  அ) மெதுவாக 

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………….. அ) என்ன என்று ஆ) என்னென்று இ) என்னவென்று ஈ) என்னவ்வென்று 

விடை :  இ) என்னவென்று 

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………… 

அ) அந்த + காட்டில் ஆ) அ + காட்டில் இ) அக் + காட்டில் ஈ) அந்தக் + காட்டில்

 விடை : ஆ) அ + காட்டில் 

 4. “என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) என்ன + ஆயிற்று ஆ) என்னவா + ஆயிற்று இ) என்ன + வாயிற்று ஈ) என்னவோ + ஆயிற்று 

விடை : அ) என்ன + ஆயிற்று 

  வினாக்களுக்கு விடையளிக்க 

  1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின? 

விடை :  விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின. 

 2. நரி, முதலையிடம் என்ன கூறியது? 

விடை :  “இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.” “விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது. 

  3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்? 

விடை : எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது. 


 உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக



மொழியோடு விளையாடு 

 கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. 
உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

அகர வரிசைப்படுத்துக 

 மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய். 

 மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை


PREPARED BY THULIRKALVI TEAM 

Post a Comment

أحدث أقدم

Search here!