தலைமை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது 11.4.2022 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் அமைச்சர் துறை அவர்கள் சிறந்த பள்ளித் ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள். 
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் கண்டுள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டமைப்பு. கல்விச் செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அளவிலான தேர்வுக் குழு, பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வின் அடிப்படையில் பார்வையில் கண்டுள்ள அரசாணையின் எண்ணிக்கைக்கு இரு மடங்கு பின்னிணைப்பு-1ல் தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான தலைமை ஆசிரியர்களைத் தெரிவு செய்து மதிப்பீட்டுப் படிவம் மற்றும் விவர அறிக்கையினை மாநிலத் தேர்வுக் குழுவுக்கு 20.01.2024க்குள் பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
இப்பொருள்சார்ந்து, பார்வையில் கண்டுள்ள அரசாணையின்படி மாவட்ட தேர்வுக் குழு அமைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய / பணியாற்றி வரும் பள்ளியில் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள். பங்களிப்பு ஆகியனவற்றை ஆசிரியரின் தலைமை பள்ளி வளர்ச்சிக்கு கருத்திற்கொண்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைகள் சமர்ப்பித்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment

أحدث أقدم

Search here!